சித்த மருத்துவத்தால் உயிரை காக்க முடியாது
எந்த நோயையும் குணப்படுத்த முடியாது
நவீன மருத்துவம் மட்டுமே உயிர் காக்கும்
என்பதால் நவீன மருத்துவத்தை பயன்படுத்துகிறார்கள்
இதில் என்ன பிழை
நோயாளி நலம் பெற வேண்டும் என்பது தானே முக்கியம்
எந்த முறை என்பதா முக்கியம் ?
சித்த மருத்துவக்கல்லூரிகளிலும் நவீன மருத்துவத்தை சொல்லி கொடுப்பதன் மூலம் இதற்கு எளிய தீர்வு உண்டே
வைத்தியம் பார்ப்பது நவீன மருந்துகளை வைத்து என்றால்
ஏன் சித்த மருத்துவக்கல்லூரி நமக்கு தேவை ?
அடுத்த மாதம் திறக்கும் 11 கல்லூரிகளுடன் சித்த கல்லூரிகளையும் நவீன மருத்துவக்கல்லூரிகளாக மாற்றலாமே
ஒருவருக்கு பைல்ஸ் பிரச்சனை அல்லது சிறுநீரக கோளாறு இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள்.
இப்பொழுது அவர் வைத்தியம் செய்து கொள்ள நிறைய இடங்கள் உள்ளன
1. அரசு மருத்துவமனையில் – இலவசமாக
2. தனியார் மருத்துவமனையில் – காசு கட்டி
3. தனியார் மருத்துவமனையில் – காப்பீடு மூலம் (அதாவது ஏற்கனவே காப்பீடு திட்டத்தில் சேர்ந்திருந்தால்)
எந்த மருத்துவமனை செல்வது என்பதை தீர்மானிக்க அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நேரம் உள்ளது.
அவர் தனியார் மருத்துவமனையில் சேர்கிறார் என்றால், அவர் பணம் கட்டுவார் அல்லது அவரது காப்பீடு திட்டத்தை வைத்து அந்த மருத்துவமனை காப்பீடு நிறுவனத்திற்கு விண்ணப்பிப்பார்கள். அப்படி விண்ணப்பித்தவுடன், அந்த நிறுவனம் அதை அங்கீகரிக்கும். அதை வைத்து சிகிச்சை துவங்கும்
அவசரமில்லாத சிகிச்சைகளுக்கு இந்த பிரச்சனை இல்லை ஆனால் விபத்துக்களில் சிக்கல் உள்ளது
-oOo-
அடி சிறிது என்றால் – சிராய்ப்பு மட்டும் தான் என்றால்- முதலுதவி சிறிது தான், சிகிச்சையும் சிறிது தான்.
ஆனால் அடி பலம் என்றால் – தலைக்காயம் அல்லது விலா எலும்பு முறிவு, கை கால் எலும்பு முறிவு என்றால்- முதலுதவியும் அதிகம், சிகிச்சையும் அதிகம்.
உதாரணமாக,
சிராய்ப்பு என்றால் முதலுதவிக்கு 100 ரூபாய் ஆகும். மொத்த வைத்தியம் ரூ500 முதல் ரூ1000 வரை ஆகும்.
கை எலும்பு முறிவு என்றால் முதலுதவிக்கு 1000 ரூபாய் ஆகும். மொத்த வைத்தியம் ரூ10000-ரூ30000 வரை ஆகலாம்.
கால் எலும்பு முறிவு என்றால் முதலுதவிக்கு 10000 ரூபாய் ஆகும். மொத்த வைத்தியம் ரூ1 லட்சம் – ரூ2 லட்சம் வரை ஆகலாம்.
தலைக்காயம் / முதுகு எலும்பு முறிவு என்றால் முதலுதவிக்கே ரூ1 லட்சம் ஆகும். மொத்த கட்டணம் ரூ3 லட்சம் முதல் ரூ10 லட்சம் ஆகலாம்
இது புரிந்து கொள்ளத்தான். சரியான கட்டணம் என்பது நபருக்கு நபர் மாறுபடும்.
-oOo-
முதலுதவிக்கு 1 லட்சமா என்று கேள்வி எழுகிறதா ?
1980களில் முதலுதவி என்பது கட்டு போடுவது + வலிக்கு மாத்திரை அளிப்பது மட்டுமே. 1980களில் முதலுதவி என்பதை ஒரு சிறிய பெட்டிக்குள் அடக்கி விடலாம்
2021ல் முதலுதவி என்பதே பெரிதாகிவிட்டது
Philadelphia Collar / Spine Board / Pelvic Binders / Splints
Suction / OP Airway / NP Airway / Intubation / Tracheostomy
Ventilatory Suppor
Venflon / Central Line
Stat Lab
Volume Replacement Blood Transfusion
X Ray / eFast / CT / MRI
ICD / Pericardiocentesis
எனவே இன்றைய தேதிக்கு
உண்மையான முதலுதவி என்பது விபத்தின் தன்மையை பொருத்து 10 ரூபாயில் இருந்து (சிராய்ப்பு என்றால்) ரூ1 லட்சம் வரை (தலைக்காயம் + எலும்பு முறிவு + நுரையீரல் பாதிப்பு) ஆகும்.
-oOo-
சும்மா ஒரு கட்டு போட்டுவிட்டு, டிடி ஊசி போடுவது என்றால் 100 ரூபாய் செலவு. ஆனால் உண்மையில் உயிரை காக்க வேண்டும் என்றால் 1 லட்சம் செலவு.
சும்மா ஒரு கட்டு போட்டுவிட்டு, டிடி ஊசி போடுவது என்றால் 10 நிமிடம் தான் ஆகும். ஆனால் உண்மையில் உயிரை காக்க வேண்டும் என்றால் 6 மணி நேரம் வரை ஆகலாம்.
-oOo-
அந்த காலத்தில் எல்லாம் அடிபட்டால் 10 ரூபாய் தான் செலவு. இப்ப 1 லட்சமா, ஹாஸ்பிட்டல் எல்லாம் கொள்ளையடிக்கிறாங்க என்று புலம்புகிறீர்களா ?
சற்றுப் பொறுங்கள்.
விபத்தினால் நேரும் மரணங்களை கீழ்க்கண்டவாறு பகுக்கலாம்.
(1) முதல் வகை: மூளை, இதயம், மகாதமணி, முதுகுத்தண்டு ஆகியவை கிழிபடுவதால் ஏற்படும் உடனடி மரணம் – இது அடிபட்ட சில நொடிகளில் இருந்து 10 நிமிடங்களுக்குள் ஏற்படும். இதில் உயிரை காக்க வாய்ப்பு குறைவு. விபத்தை தடுப்பதன் மூலமே இதை தடுக்க முடியும்.
(2) இரண்டாம் வகை : மண்டக்குள் இரத்தக்கட்டு, நுரையீரலை சுற்றி இரத்தம் கட்டுவது, இதயத்தை சுற்றி இரத்தம் கட்டுவது, இரத்தப்போக்கு, மூச்சுத் திணறல் ஆகியவற்றால் ஏற்படும் மரணங்கள். இவை 10 நிமிடங்களில் இருந்து 2-3 நாட்களுக்குள் ஏற்படும். ஆனால் அடிபட்ட உடனே, அடிபட்ட 1 மணி நேரத்திற்குள் சிகிச்சையை அளிப்பதன் மூலம் இவர்களின் உயிரை காக்க முடியும்.
(3) மூன்றால் வகை : பிற அடிகள்.
-oOo-
1980களில் முதலுதவி என்பது கட்டு போடுவது + வலிக்கு மாத்திரை அளிப்பது மட்டுமே. 1980களில் முதலுதவி என்பதை ஒரு சிறிய பெட்டிக்குள் அடக்கி விடலாம். காரணம் அன்றைய காலக்கட்டத்தில் நாம் மூன்றாம் வகை அடிகளுக்கு மட்டும் தான் முதலுதவி செய்து வந்தோம்.
அன்றைய காலக்கட்டத்தில்
மண்டைக்குள் இரத்தக்கட்டு, நுரையீரலை சுற்றி இரத்தம் கட்டுவது, இதயத்தை சுற்றி இரத்தம் கட்டுவது, இரத்தப்போக்கு, மூச்சு திணறல் ஏற்பட்டால் மரணம் தான்.
அதாவது 1980களை பொருத்தவரை,
முதல் வகை + இரண்டாம் வகை இரண்டுமே ஸ்பாட் அவுட் தான்
ஆனால் 2021ல் நவீன அறிவியல் மருத்துவம் வளர்ந்த பிறகு இரண்டாம் வகைக்கு சிகிச்சை வந்துள்ளது. அதன் மூலம் உயிரை காக்க முடிகிறது. ஆனால் இதற்கு ரூ3 லட்சம் முதல் 10 லட்சம் வரை ஆகிறது. இந்த முதலுதவிக்கே ரூ1 லட்சம் ஆகிறது
அந்த காலத்தில் அடி பட்டு “ஸ்பாட் அவுட்” என்று கணக்கில் வந்தவர்களில் பாதி பேரை காக்க முதலுதவிக்கே 1 லட்சம் ஆகிறது.
அதாவது 10 ரூபாய் கட்டு போதுவது 1 லட்சம் ஆகவில்லை, புதிதாக 1 லட்சத்திற்கு சிகிச்சை வந்துள்ளது.
-oOo-
ஒருவர் சாலையில் செல்லும் போது விபத்துக்காகிறார் என்றால், அவர் கையில் 1 லட்சம் இருந்தால் அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை.
அவர் கையில் காசு இல்லை என்றால் அந்த தனியார் மருத்துவமனைக்கு யார் காசு கொடுப்பார்கள்?
அவர் கையில் காசு இல்லை, ஆனால் அவரிடம் காப்பீடு உள்ளது. அந்த காப்பீடு எண் கையில் இல்லை. அந்த தனியார் மருத்துவமனைக்கு யார் காசு கொடுப்பார்கள்?
இது தான் இன்று வரை இருந்த நடைமுறைச் சிக்கல்.
-oOo-
உதாரணமாக
ஒருவருக்கு விபத்தில் கை எலும்பு முறிந்துள்ளது, இது வரை 108 அம்புலன்ஸ்
அவரிடம் பணம் இருக்கிறதா?, காப்பீடு உள்ளதா?, உறவினர்களால் பணம் செலுத்த முடியுமா? என்ற எந்த கேள்வியும் கேட்காமல்
அவரை அரசு மருத்துவமனைக்குத்தான் அழைத்து செல்லும். அங்கு சென்று அவருக்கு முதலுதவி செய்யப்படும்.
பிறகு உறவினர்கள் எல்லாம் வந்த பிறகு
1. அவர்களிடம் காசு இல்லை என்றால் அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை தொடரலாம்.
2. அவர்களிடம் காசு அல்லது காப்பீடு இருந்தால் வேறு தனியார் மருத்துவமனை செல்லலாம்.
-oOo-
உதாரணமாக,
ஒருவருக்கு விபத்தில் கை எலும்பு முறிந்துள்ளது
அவரிடம் பணம் உள்ளது.
அவர் தனியார் மருத்துவமனை தான் செல்வேன் என்று சொன்னால் அம்புலன்ஸ் அவரை அங்கு அழைத்து செல்வார்கள்.
-oOo-
உதாரணமாக,
ஒருவருக்கு விபத்தில் தலையில் அடிபட்டு மயக்கமாகியுள்ளார். அவர் யார் என்றே தெரியாது. இது வரை 108 அம்புலன்ஸ்
அவரை அரசு மருத்துவமனைக்குத்தான் அழைத்து செல்லும். அங்கு சென்று அவருக்கு முதலுதவி செய்யப்படும்.
பிறகு உறவினர்கள் எல்லாம் வந்த பிறகு
1. அவர்களிடம் காசு இல்லை என்றால் அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை தொடரலாம்.
2. அவர்களிடம் காசு அல்லது காப்பீடு இருந்தால் வேறு தனியார் மருத்துவமனை செல்லலாம்.
-oOo-
இப்பொழுது தமிழக அரசு கொண்டு வந்துள்ள திட்டம் என்ன?
முழுசிகிச்சையில் முதலுதவி பகுதியை மட்டும் தனியாக பிரித்து அந்த முதலுதவிக்கு தமிழக அரசு பணம் கொடுக்கும் என்பது தான்.
இந்த திட்டத்தின் மூலம்
விபத்தில் அடிபட்டவரை அரசு மருத்துவமனைக்குத்தான் கொண்டு வரவேண்டும் என்ற அவசியம் இல்லை.
அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லலாம். முதலுதவிக்கு அரசு பணம் கொடுக்கும் என்பதால்
மருத்துவமனையும் பணம் பற்றி கவலைப்படாமல் சிகிச்சையை துவங்குவார்கள். அவருக்கு முதலுதவி சீக்கிரம் கிடைக்கும்.
பிறகு அவரது உறவினர்கள் வந்த பிறகு அவர்கள் ஆற அமர முடிவு செய்து (இரண்டு நாட்களுக்குள்)
1. காசு அல்லது காப்பீடு இல்லை என்றால் அரசு மருத்துவமனைக்கு வரலாம்
2. காசு அல்லது காப்பீடு உள்ளது என்றால் அதே மருத்துவமனையில் தொடரலாம்
3. காசு அல்லது காப்பீடு உள்ளது என்றால் வேறு தனியார் மருத்துவமனை செல்லலாம்
-oOo-
இதனால் என்ன பலன்?
1. அடிபட்டவருக்கு : உதவி சீக்கிரம் கிடைக்கும். எனவே உயிரை காக்க வாய்ப்பு அதிகம். கை கால் ஆகியவற்றில் அடி பட்டிருந்தால் அந்த உறுப்புகளை காக்கவும் வாய்ப்பு அதிகம்.
2. உறவினர்களுக்கு : ஒருவர் விபத்தில் அடிபட்டார் என்பது அதிர்ச்சி தரும் செய்தி. அந்த நிலையில் அதே மருத்துவமனையில் தொடர்வதா, வேறு எங்கும் செல்வதா, எவ்வளவு காசு ஆகும், கையில் காசு உள்ளதா, கடன் வாங்குவதா, நகையை அடமானம் வைப்பதா என்ற முடிவு எடுக்கவேண்டாம்.
3. தனியார் மருத்துவமனைக்கு: அந்த நபர் அதே மருத்துவமனையில் சிகிச்சையை தொடர்ந்தால், அவர்களுக்கு வருமானம்.
4. அரசிற்கு : மக்களின் உயிரை காக்க முடியும்.
-oOo-
சும்மா இருப்பவர்களை கூட தனியார் மருத்துவமனைகள் பெரிய அடி இருப்பதாக காண்பித்து அதிக கட்டணம் வாங்க முடியுமா ?
முடியாது.
(1) 108 அம்புலன்ஸ்சில் ஒருவர் ஏறும் போதே அவரது உடல்நிலை என்ன என்பது குறித்து அவர்கள் பதிந்துவிடுவார்கள். அதை வைத்தே அவரின் முதலுதவிக்கு எவ்வளவு பணம் தேவை என்பதை சொல்லிவிடலாம்.
(2) விபத்து நடந்த பிறகு காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவார்கள். அதிலும் காயங்களின் தன்மை இருக்கும்.
எனவே இந்த இரண்டையும் வைத்து
இது 100 ரூபாய் முதலுதவியா, (சிராய்ப்பா) 1000 ரூபாய் முதலுதவியா, (கை எலும்பு முறிவா) 10000 ரூபாய் முதலுதவியா, (தொடை எலும்பு முறிவா) அல்லது 1 லட்சம் முதலுதவியா (தலைக்காயம், வயிறு கிழிந்துவிடுவது) என்பதை எளிதில் கண்டு கொள்ளலாம்.
-oOo-
“காவல்துறையும் மருத்துவமனையும் சேர்ந்து ஊழல் செய்வார்கள், எனவே இந்த திட்டத்தை எதிர்க்கிறேன்” என்று கூறுகிறீர்கள் என்றால் avada kedavra என்பதை தவிர சொல்ல எதுவும் இல்லை.
மேலும் அறிந்து கொள்ள இந்த காணொளியை பார்க்கலாம்
மருத்துவம் தொடர்பாக மூத்த எலும்பியல் மருத்துவர் லோகநாதன் சார் அவர்களின் பிற காணொளிகளை இங்கு காணலாம்
IKT – 48 மணி நேரம் நம்மைக்காக்கும் இன்னுயிர் காப்போம் திட்டம்
Creating Emergency Care Fund (IKT Fund)
50 Cr Assurance Mode
Fix ceiling of up to Rs. 1 lakh per individual
Empanelment of Government and Private Hospitals – 609
Integrate the 48 hour cashless scheme with the existing CMCHIS scheme after 48 hours
Selection of 81 Appropriate Packages
IKT Empanelled 609 Hospitals
Government Hospitals
Private Hospitals
Level 1 Hospitals
20
30
50
Level 2 Hospitals
74
157
231
Level 3 Hospitals
121
207
328
215
394
609
The Scope of coverage
If a patient needs admission and minor procedure (listed) which does not exceed 48 hours stay the same may be done at the hospital he/she is being admitted.
If the patient is not stable or requires procedures that may need Hospitalisation beyond 48 hours one of the following conditions may apply.
Stabilization of the patient and Discharge to any empanelled Hospital if the patient needs further treatment which is covered under Chief Minister’s Comprehensive Health Insurance Scheme and is eligible for Coverage.
Stabilization of the patient and Discharge to Government Hospital if the patient needs further treatment but the treatment is not covered under Chief Minister’s Comprehensive Health Insurance Scheme or eligible for Coverage.
Stabilization of the patient and continuation of treatment in same Hospital or any other hospital of his / her choosing if the patient is not willing for transfer to Government Hospital (or) has private Insurance (or) willing to continue treatment as a paid patient.
IKT – Categories of patients who will benefit under NK – 48
All accident victims on road within TN border including tourists from other states and foreigners
Accident victims brought by Good Samaritans
Accident victims brought by family
Accident victims who come by themselves
Unknown accident victim brought by police, or Good Samaritans
Mass casualty accident victims
IKT – NK 48 Exclusion criteria
Assault injuries
Domestic injuries
Fall from height
Injuries due to fall of heavy object
Train traffic accident injuries
Animal bites, Self harm
Occupational work place injuries
Thermal /Chemical/ Burn Injuries
Cracker Blast Injuries
5 Steps of Emergency Trauma Care
Prehospital Triage & Transportation by Ambulance along with in-transit care
Resuscitation & Stabilization in hospital Emergency Department
Damage Control Surgeries
Definitive Care
Rehabilitation
Step 1,2,3 – IKT
Steps 4,5 – KKT – CMCHIS
NK 48 Guideline
On receipt of information from the accident site, Life support ambulance with trained manpower will reach the spot, Triaging & basic resuscitation (cABC) will be done by EMT.
Patients maybe entitled for free treatment upto 48 hours in hospitals of IK – NK 48 Scheme empanelled private hospitals of neighbouring states if the accident occurs within Tamil Nadu but close to the state border.
NK 48 Guideline
5 Levels of triaging at the Accident Scene for guiding the EMT
Pre-hospital Triage & Acuity Scale
Description of the Acuity Scale
Equivalent Triage category
Level 1 – Resuscitation
Patient battling for life in need of resuscitation/Severe hemodynamic compromise/Shock/Traumatic amputation of an extremity
Red
Level 2 – Emergent
Seriously injured patient who requires rapid medical intervention/Penetrating head,chest or abdominal injury/Neurovascular compromise of an extremity
Red
Level 3 – Urgent
Patient with stable vitals, but the presenting problem suggests further evaluation
Minor contusions, abrasions, lacerations not requiring closure, Non urgent with minor complaint
Green
RTA – Patient comes to any Hospital
IK NK 48 Basic Trauma Package for any RTA Patient – Clinical examination ,Hb, Urea, Sugar,ECG,X –Ray Chest. Patient is stable. He will be discharge (Green Category)
Patient in Red / Yellow category
CMCHIS Card Holder(Upto 48 hours) IK – NK48 Empaneled Hospital
Treatment under IK – NK 48 Packages
CMCHIS Non Card Holder / other state / Foreign RTA victims (Upto 48 hours) IK – NK48 Empaneled Hospital
Treatment under IK – NK48 Packages
Packages applicable only Upto 48 Hours in the NK 48 empanelled 609 hospitals only. IFT Can be done within 48 hours based on the triage only among the NK 48 empanelled 609 hospitals
Treatment will be continued under CMCHIS as per existing packages
Non CMCHIS Card holder ( Govt / Pvt empanelled Hospitals under CMCHIS)
Treatment will be continued under free category in Govt Hospitals
Treatment will be continued under payment / pvt insurance by the patient in pvt hospitals
Other state / foreign RTA victims
Treatment will be continued under free category in Govt Hospitals
Treatment will be continued under payment / pvt insurance / PM-JAY by the patient in pvt hospitals
NK 48 Guideline
Critically ill (Red category) patient to be taken by 108 Ambulance service to the nearest empanelled Level 1 Hospital if located within 20-30km.
The Level 1 Hospital may be a Government Hospital or a private facility.
The patient should be transported in the shortest period to ensure advanced trauma life support.
If it is far, the patient should be stabilized in the nearest L2 or L3 hospital and through 108 ambulance should move the patient after stabilization to the L1 facility for definitive intervention.
2 hr mandatory resuscitation for a critically injured patient before any Inter-facility Transfer.
IFT with Pre-Arrival Intimation to the receiving hospital.
Time Norms in Emergency Care of RTA patients
NK 48 Guideline – Preauth & Claim
EI number should be obtained by the treating hospital, & the URN should be shared even with IFT(Inter facility transfer) Hospital till the treatment course is completed under IKT.
When treatment involves more than 1 hospital, the treatment time will be from the time of admission in the 1st hospital (upto 48 hours only).
NK 48 Guideline – Preauth
Pre-auth submission by Hospital
Within 4 hours of admission during 8 am to 6 pm.
Within 12 hours of admission during 6 pm to 8 am
PREAUTH CRITERIA
Any Identification Card.
If there is no Identity Card, a letter from Hospital to be submitted.
Patient’s Clinical Photo.
Preliminary Assessment Report duly certified by examining Doctor.
AR copy with treating Doctor’s sign.
If the patient needs additional treatment or procedure, Enhancement request may be applied with Secondary Survey report.
CLAIMS CRITERIA
Treatment Summary, Discharge Summary / Referral Letter/ Death Summary within 5 days from the date of admission.
Declaration that no money has been collected from the patient during the course of treatment
CMCHIS URN if available.
All investigations done, with Images.
Operative notes and Case sheet.
Hospital Bills (detailed).
IKT – NK 48 Claims
Claims settlement for NK 48 within 3 days from Claim submission.
CMCHIS call center will make telephonic enquiry on the patient status and keep a record.
Any Death within 1 month of major accident should be reported with PM report for record maintenance.
NK 48 Guideline
Strict follow-up and bench marking of hospitals as per TAEI standards.
Frequent Audits for quality of care
List of Packages
S.NO
Package Name
Rate (in Rs.)
1
TA001 : Central line
4000
2
TA002 : Intraosseous line
4000
3
TA003 : Cervical Collar (philadelphia)
1500
4
TA004 : Endotracheal Intubation
2000
5
TA005 : Tracheostomy
10000
6
TA006 : Oropharngeal Airway
2000
7
TA007 : Blood and Blood Component Transfusion
2000
TA007a : Blood and Blood Component Transfusion – additional uit
Respected surgeons, I am an aspiring surgeon. Got a rank of 2500 in neetpg and have always dreamt of being a surgeon. But now people are advising against it, saying that there is too much of frustration and money is not good, and that I should opt for obgy or radiology. Massively confused now… is it so? Is surgery no more a decent branch?
Answer :
Dear Doctor
There are 4 different aspects
1. What we are good at
2. What we love to do
3. What the world needs
4. What we can get paid
Of these
(a)
What we are good at
What we love to do
is our passion
(b)
What we love to do
What the world needs
is our Mission
(c)
What the world needs
What we can get paid
is our Vocation
(d)
What we are good at
What we can get paid
is our profession
There are few people
Who can have the all the four in one job / work
But
Many don’t have that
So
We must at least learn to distribute our time
For me
Passion is Neurosurgery
Mission is my work in Government like HMIS, TAEI etc
Profession is Web Designing and Software Development where I earn more 🙂
Vocation is writing and trying to bring change in Areas like Diet, Healthcare
So
You can do General Surgery and Still Earn 10 Lakhs
You can do MD Radiology and Still Earn 1 lakhs
What will happen after 3 years, 10 years you won’t know
But
First Chose the filed you like
with an understanding that you may or may not earn in the same field
If you are able to earn (that is if your passion and profession are the same), well and good
If not do your passion and look for alternative sources of income like Share Market etc in due course
Please note that very few individuals can have the same Profession-Passion-Vocation-Mission
If you have, well and good
If not, learn to adjust
So
Bottom Line is
As of now
Learn the Course which you love
But be prepared to find that your Co PG earning 10 times as you after 10 years or you earning 10 times as him after 10 years
That we cannot predict now
உண்மையை மறைக்கும் சொற்களை எனக்கு பிடிப்பதில்லை. நிதர்சணத்தை ஒளிக்கும் சொற்களை எனக்கு பிடிப்பதில்லை.
இடக்கரடக்கல், மென்மொழி, மறைமொழி ஆகியவை பல நேரங்களில் நன்மைகளை விட தீமைகளையே அதிகம் செய்கின்றன. ஆனால் அமெரிக்கர்களுக்கு இவை மிகவும் பிடித்தமானவையாக உள்ளன. அமெரிக்கர்களுக்கு நிதர்சணத்தை எதிர்கொள்ளவும், உண்மையை பேசவும் தயக்கம் இருப்பதால் அவர்கள் இந்த மென்மொழிகளை பயன்படுத்துகிறார்கள். இது நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே உள்ளதை அவர்கள் அறிவதில்லை.
உதாரணமாக போரில் ஈடுபடுவர்களில் மரணத்தையும், மரணங்களையும் அருகில் பார்த்தவர்களுக்கு மனநிலை பாதிப்பு ஏற்படுவது உண்டு. முதலாம் உலகப்போர் காலத்தில் இதை வெடிகுண்டு அதிர்ச்சி (ஷெல் ஷாக் shell shock) என்று அழைத்தார்கள். எளிமையான இரு சொற்கள். அனைவருக்கும் புரியும். யாருக்கும் குழப்பம் வராது. ஆனால் இது உண்மையை நேரடியாக, பட்டவர்த்தமாக கூறுகிறதே. எனவே அமெரிக்கர்களுக்கு இதை தாங்க முடியவில்லை. எனவே இரண்டாம் உலக யுத்தத்தின் போது ஷெல் ஷாக் என்பதை போர் சோர்வு (பேட்டல் ஃபெட்டிக் battle fatigue) என்று அழைக்க ஆரம்பித்தார்கள். இது கேட்க நன்றாக இருந்தது. ஆனால் பாதி உண்மையை மறைத்தது. சோர்வு என்பது அதிர்ச்சி என்பதை விட குறைவான பாதிப்பு என்ற பிம்பத்தை தந்தது. அடுத்து கொரியாவில் போர் வந்த போது போர் வீரர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு செயல்பாட்டு களைப்பு (ஆபரேஷனல் எக்சாஷன் Operational Exhaustion) என்று ஆனது. இது மேலும் இனிமையாக இருந்தது. ஆனால் பாதிப்பை எந்த விதத்திலும் தெரிவிக்கவில்லை. வியட்நாம் யுத்தம் முடிந்த பிறகு இந்த நிலையை பேரதிர்ச்சிக்குப் பிறகான மனஉளைச்சல் அல்லது பேரதிர்ச்சிக்குப் பிறகான சீர்கேடு (போஸ்ட் ட்ராமட்டிக் ஸ்டெரஸ் டிசார்டர் post-traumatic stress disorder) என்று மாற்றிவிட்டார்கள். மிகக்கொடுமையான மனநோய் ஒன்று மிக அருமையான பெயர் பெற்றது. இதனால் போர் வீரர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பின் வீரியம் பலருக்கும் புரியவில்லை. அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. அவர்களின் வலி வார்த்தைகளின் ஜாலத்தில் அமிழ்ந்து போனது. அவர்களுக்கு உரிய சிகிச்சை கிடைக்கவில்லை. அவர்கள் இழந்தது இந்த மென்மொழியில் கரைந்து போனது. அவர்களுக்கு உரிய பணம் கிடைக்கவில்லை. அவர்களின் இழப்பை இந்த இடக்கரடக்கல் மழுங்கடித்து அவர்களுக்கு உரிய கவனிப்பு கிடைக்கவில்லை.
இது மட்டுமல்ல, திடீரென்று ஒரு நாள் கழிவறை காகிதம் (டாய்லட் பேப்பர் toilet paper) குளியலறை திசு (பாத்ரூம் டிஷ்யூ) ஆனது. Sneakers என்பது running shoes ஆனது. பொய்ப்பல் (False teeth) என்பது பல் கருவிகள் (dental appliances) ஆனது. மாத்திரை (Medicine) என்பது மருந்துவம் செய்வது (became medication) ஆனது. தகவல் (Information) என்பது விபரத்திரட்டி உதவி (directory assistance) ஆனது.
குப்பை கொட்டுவதை (dump) நிலநிரப்பல் (landfill) என்று சொல்லி உண்மையை மறைக்கிறோம். சீருந்து மோதியது (Car crash) என்பதை வாகன விபத்து (automobile accidents) என்று மாற்றுகிறோம்.
பாதி மேகமூட்டம் (Partly cloudy) என்பதை பாதி வெயில் (partly sunny) என்றும் உந்துலாவினர் உணவகம் (Motels) என்பதை வாகன விடுதிகள் (motor lodges) என்றும் இழுவை வண்டிகளில் குடியிருப்பதை (House trailers) என்பதை நடமாடும் வீடுகள் (mobile homes) என்றும் பழைய சீருந்துகள் / செகண்ட் ஹேண்ட் கார்கள் (Used cars) என்பதை ஏற்கனவே உரிமை பெற்றிருந்த வாகனங்கள் (previously owned transportation) என்றும் அறைகளில் பரிமாறூவதை (Room service) விருந்தினர் அறையில் உண்பது (guest-room dining) என்றும் நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டதன் தொடர்ச்சி தான் மலச்சிக்கல் (constipation) என்பதை அவ்வவ்போது ஏற்படும் ஒழுங்கின்மை (occasional irregularity) என்று அழைப்பது
அந்த காலத்தில் உடம்பு சரியில்லை என்றால் மருத்துவமனை (ஆஸ்பத்திரி hospital) சென்று மருத்துவரை (doctor) பார்த்தோம். இப்பொழுது நலம் பேனும் நிறுவனம் (health maintenance organization) அல்லது சுக நிலையம் (wellness center) சென்று சுகாதார சேவை வழங்கும் பணியாளரை பார்க்க சொல்கிறார்கள் (healthcare delivery professional)
ஏழைகள் குடிசையில் வசித்தார்கள் என்பது இன்று பொருளாதார ரீதியாக பின்னடைவில் உள்ளவர்கள் தரமற்ற வீடுகளில் வசிக்கிறார்கள் (economically disadvantaged occupy substandard housing) என்று மாறியுள்ளது. அத்துடன் இந்த பிரச்சனையின் வீரியமும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான தீர்வுகள் மெதுவாகின்றன.
நிறுவனம் திவாலாகி அவரை பணியில் இருந்து நீக்கியதால் அவரிடம் பணம் இல்லை. இதை நேரடியாக சொல்லாமல் சுற்றி வளைப்பதில் என்ன பலன். அவரிடம் பணம் இல்லை என்பதை அவர் எதிர்மறை பண பரிவர்த்தனை நிலையில் (negative cash-flow position) உள்ளர் என்று சொல்லி அவருக்கு வரும் உதவிகள் குறைகின்றன
பணியில் இருந்து நீக்கப்பட்டார் (fired) என்று சொல்லாமல் மனிதவள மேம்பாடு பகுதியில் இருக்கும் மிகைமைகளை குறைக்க நிர்வாகம் முடிவெடுத்ததால் (management wanted to curtail redundancies in the human resources area) அவர் தற்சமயம் வேலையாளாக இல்லை (no longer viable members of the workforce) என்று சொல்வதால் அவருக்கு புதிய வேலை கிடைக்கும் வாய்ப்புகள் குறைகின்றன
அற்பத்தனமாக பெருமிதப்பட்டுக்கொள்கிற முதலாலித்துவ நபர்கள் இது போன்ற சொற்களை கண்டுபிடித்து பயன்படுத்தி தங்களின் பாவங்களை மறைத்துக்கொள்கிறார்கள்
சிஐஏ (CIA) யாரையும் கொல்வதில்லை (kill). அவர்கள் மக்களை செயலிழக்க வைக்கிறார்கள் (neutralize people – உயிர் போனால் செயலிழப்பு தானே) அல்லது அந்த பகுதியில் மக்கள் இல்லாமல் பார்த்துக்கொள்கிறார்கள் (depopulate the area). ஆனால் கொல்வதில்லை (kill) !!
அதே போல் அரசு பொய்(lie) சொவ்ல்வதில்லை. அவர்கள் தகவல்களை மாற்றுகிறார்கள் (engages in disinformation) அணுகுண்டினால் ஏற்படும் பாதிப்புகளை பெண்டகன் சன்ஷன் யூனிட் என்பதை வைத்து அளக்கிறது. நம் நாடு கொலைகாரர்களுக்கு கமாண்டோக்கள் என்று பெயர். அடுத்த நாட்டு கமாண்டோக்களுக்கு தீவிரவாதிகள் என்று பெயர்.
காசுக்கு கொலை செய்பவர்கள் (Contract killers) சுதந்திர போராட்ட வீரர்கள் (freedom fighters) என்று அழைக்கப்படுகிறார்கள்.
காவல்துறையினர் (crime fighters) குற்றங்களை எதிர்க்கிறார்கள். தீயணைப்பு துறையினர் (fire fighters) தீயை எதிர்த்து போராடுகிறார்கள். இந்த காசுக்கு கொலை செய்பவர்கள் சுதந்திரத்தை எதிர்த்து தானே போராடுகிறார்கள்.
ஹோட்டல் முதலாளியின் மாப்பிள்ளை 500 ரூபாய் நோட்டு ஒன்றை அசல் நோட்டு போல தத்ரூபமாக ஜெராக்ஸ் செய்து கொண்டான். அந்த ஜெராக்ஸ் 500 ரூபாய் நோட்டை சட்டைப் பையில் வைத்துக் கொண்டு தனது மச்சான் ஹோட்டலுக்கு போனான். கல்லாவில் இருந்த மச்சானிடம் சிறிது நேரம் பேசிவிட்டு பையிலிருந்த ஜெராக்ஸ் 500 ரூபாய் நோட்டை எடுத்து மச்சான் இடம் கொடுத்து மச்சான் இதை கொஞ்சம் வைத்துக் கொள்ளுங்கள் நான் பிறகு வந்து வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்லி அவரிடம் கொடுத்துவிட்டு போய்விட்டான்.
சிறிது நேரம் கழித்து ஹோட்டலுக்கு பால் ஊற்றுபவர் தனக்கு ஒரு 500 ரூபாய் அவசரமாக வேண்டியிருக்கிறது. தனக்கு வர வேண்டிய பால் பணத்தில் கழித்துக் கொள்ளலாம் என்று சொல்லி முதலாளியிடம் பணம் கேட்கிறார். கல்லாவில் 500 ரூபாய் சேரவில்லை. சிறிது நேரம் யோசித்த முதலாளி தனது மாப்பிள்ளை கொடுத்துவிட்டு சென்ற 500 ரூபாய்யை பால்காரரிடம் கொடுக்க அந்தப் பணத்தை வாங்கிக் கொண்டு கடையை விட்டு சென்று விடுகிறார்
மாப்பிள்ளை வருவதற்குள் வியாபாரத்தில் 500 ரூபாய் தேற்றிவிட முடியாதா என்ற நம்பிக்கையில் தான் அந்த பணத்தை எடுத்து பால்காரரிடம் கொடுத்து விட்டார் ஹோட்டல்காரர்.
ஹோட்டலில் இருந்து 500 ரூபாயை வாங்கி சென்ற பால்காரர் நேராக தனது மனைவிக்குப் பிரசவம் பார்த்த லேடிடாக்டரை சந்தித்து அவருக்கு பாக்கி வைத்திருந்த 500 ரூபாயை கொடுக்கிறார். டாக்டரும் அந்தப் பணத்தை வாங்கிக் கொள்ள அங்கு இருந்த தனது கார் டிரைவரிடம் அந்தப் பணத்தை கொடுத்து பஜாரில் இருக்கிற டெய்லர் கடையில் பழைய பாக்கிக்கு இந்த 500ரூபாய் பணத்தை கொடுத்துவிட்டு பிள்ளைங்களுக்கு எடுத்து வைத்திருக்கும் புது துணிகளை தைக்க அளவெடுக்க வரச் சொல்லவும் என்று சொல்லி டிரைவரை டெய்லர் கடைக்கு அனுப்புகிறார் டாக்டர்.
டிரைவரும் டெய்லர் கடைக்குப் போய் டாக்டர் அம்மா வீட்டு பாக்கிக்கு இந்த 500 ரூபாய்யை வாங்கிக் கொள்ளும். வீட்டில் பிள்ளங்களுக்கு புது துணி அளவெடுக்கும் வரச்சொன்னார்கள் என்று தகவல் சொல்லிவிட்டு நகர்ந்தார் டிரைவர்.
காஜாப் பையனிடம் கடையைப் பார்த்துக்கொள் என்று சொல்லி டிரைவர் கொடுத்த 500 ரூபாயை எடுத்துக்கொண்டு ஹோட்டலுக்கு கிளம்பினார் டெய்லர்.
கல்லாவில் அமர்ந்திருந்த ஹோட்டல் முதலாளியிடம் ஐயா என் மகளின் சடங்குக்கு தங்கள் கடையில் சாப்பாடு வாங்கிய வகையில் 500 ரூபாய் பாக்கி இருக்கிறது இந்த 500 ரூபாயை வாங்கிக்கொண்டு கணக்கை நேர் செய்து கொள்ளுங்கள் என்று டிரைவர் கொடுத்த 500 ரூபாயை ஹோட்டல் முதலாளியிடம் தருகிறார் டெய்லர். சரி அப்படியே செய்து கொள்ளலாம் என்றபடியே ஐநூறு ரூபாயை வாங்கி வைத்துக் கொண்ட முதலாளி அதை கல்லாவில் தனியே ஒரு டப்பாவில் போட்டு வைக்கிறார்.
ஏனென்றால் மாப்பிள்ளை வந்து கேட்டால் 500 ரூபாய் நோட்டு தரவேண்டுமே என்ற எண்ணத்தில் இந்த 500 முழு ரூபாய் நோட்டை பத்திரப்படுத்தி வைக்கிறார்.
சிறிது நேரத்தில் அவரின் மாப்பிள்ளை வந்து மச்சான் நான் கொடுத்த 500 ரூபாய் கொடுங்கள் என்று கேட்டு வாங்கிக் கொள்கிறார்.தான் கொடுத்த 500 ரூபாய் ஜெராக்ஸ் நோட்ஸ் தான் அது என்பதை உறுதி செய்துகொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார் முதலாளியின் மாப்பிள்ளை.
வெளியே வந்த மாப்பிள்ளை ஜெராக்ஸ் எடுத்த 500 ரூபாயை சுக்கல் சுக்கலாகக் கிழித்துக் காற்றில் பறக்க விட்டார். இந்த 500 ரூபாய் ஒரு சுற்று சுற்றி வந்ததில் நடந்தது என்ன என்று கொஞ்சம் பார்ப்போம்.
முதலாளி பால்காரனுக்கு கொடுக்கவேண்டிய 500 ரூபாய் பாக்கி கணக்கு நேராகிவிட்டது. அதுபோலவே பால்காரன் டாக்டருக்கு கொடுக்க வேண்டிய கடன் நேர் ஆகிவிட்டது. அப்படியே டாக்டர் டெய்லருக்கு கொடுக்க வேண்டிய கடன் நேராகிவிட்டது. அதுபோலவே டெய்லர் ஹோட்டலுக்கு கொடுக்க வேண்டிய கடன் நேராகிவிட்டது.
இப்பொழுது ஜெராக்ஸ் நோட்டும் சுக்கல் சுக்கலாகி காற்றில் பறந்து விட்டது.
ஆனால் இத்தனை பேர் கடனும் நேராகி இருப்பது நிஜமே. இதில் நஷ்டம் அடைந்தவர் யாரும் இருக்கிறாரா? அல்லது மாயாஜாலம் ஏதும் நடந்துள்ளதா?
இதில் எந்த மாயாஜாலமும் இல்லை, மனஜாலம் மட்டுமே
யாரும் லாபம் அடையவில்லை, யாரும் நஷ்டம் அடையவில்லை
ஏற்கனவே அனைவருக்கும் 500 ரூபாய் பணம் வரவேண்டி இருந்தது 500 ரூபாய் பணம் கொடுக்கவேண்டி இருந்தது
ஆக நிகர பணம் = 0 தான்
இப்பொழுதும் 0 தான்
மாயாஜாலம் எதுவும் நடக்கவில்லை
இதில் யாரும் கடன் காரர் மட்டும் அல்ல
அனைவரும் கடன் காரர் + கடன் கொடுத்தவர் ஆகவும் இருந்தார்
ஏற்கனவே
அவர்களின் பேலண்ஸ் 0 தான்
இப்பொழுதும் 0 தான்
இப்பவும் அனைவரின் 1. கொடுக்க வேண்டிய பாக்கியும் தீர்ந்து போச்சு 2. வரவேண்டிய பாக்கியும் வந்து விட்டது இரண்டையும் சேர்த்து பார்த்தால் குழப்பம் இல்லை
இதில் லாபமும் இல்லை, நஷ்டமும் இல்லை. ஆனால் வரவேண்டிய பாக்கி 500, கொடுக்க வேண்டிய பாக்கி 500 என்று எடுத்துக்கொள்ளவேண்டும்
முதன் முறை படிக்கும் போது இது புரியவில்லை என்றால்
இரண்டு காரணங்கள் இருக்கலாம்
மனதளவில்
நாம் அடுத்தவர்களிடம் இருந்து வாங்கிய கடனுக்கு ரொம்ப மரியாதை கொடுக்கிறோம். அதுவே நமது மனதை அழுத்துகிறது. நமக்கு வரவேண்டிய பணம் அந்த அளவு அழுத்தவில்லை
அல்லது
மனதளவில்
நாம் அடுத்தவர்களுக்கு கொடுத்த் பணத்திற்கு ரொம்ப மரியாதை கொடுக்கிறோம். அதுவே நமது மனதை அழுத்துகிறது. நாம் மற்றவர்களுக்கு கொடுக்கவேண்டிய பணம் அந்த அளவு அழுத்தவில்லை
இதில்
எதாவது ஒரு மனநிலையில் இருப்பவர்கள்
இந்த கதையில் டிரான்சாக்ஷன் ஒரு வழியாக நடப்பதாக நினைத்துக்கொள்வார்கள்
வாங்கிய கடன், கொடுத்த கடன் இரண்டையும் சமமாக மனதளவில் நடத்தினால்
இந்த கதையில் எந்த மாயாஜாலமும் இல்லை
பெண்களுக்கு மாரடைப்பு வருவது மிக அரிது. இப்போதைய வாழ்வியல் முறை சகல விதிகளையும் உடைக்கிறது.
மரபியல் ரீதியாக
ஆரோக்யம் குறைவான பெண்கள்
அந்த காலத்தில்
பிறந்த வுடன் கக்குவான் இருமலினாலோ, போலியோவினாலோ
அல்லது காலராவினாமோ
பிரசவத்திலோ இறந்தவிடுவார்கள்
மிகவும் ஆரோக்கியமான மரபணுக்களை உடைய பெண்கள் மட்டுமே 30 வயது தாண்டினார்கள்
எனவே
30 வயதை தாண்டிய பெண் 100 வயது வரை வாழ்ந்தார்
இன்று
மருத்துவம் முன்னேறி விட்டதால்
ஆரோக்யம் குறைவான பெண்கள்
1 வயதில்
11 வயதில்
21 வயதில்
இறப்பது இல்லை
எனவே
அவர்களுக்கு மாரடைப்பு வருகிறது
இன்று 50 – 60 வயதில் மாரடைப்பு வந்து இறக்கும் பெண்கள் எல்லாம்
1980களுக்கு முன்னர்
50 வயது வரை வாழ்ந்திருக்கவே மாட்டார்க்ள்
பிரசவத்திலேயே
அல்லது
அதற்கு முன்னரோ இற்ந்திருப்பார்கள்
மாரடைப்பு வரும் மரபணுக்கள் உள்ள பெண்கள்
மாரடைப்பு வரும் வயது வரை வாழ்ந்து
பெண்களுக்கு மாரடைப்பு வருவது மிக அரிது.
இப்போதைய வாழ்வியல் முறை சகல விதிகளையும் உடைக்கிறது
அவர்களை அந்த வயது வரை வாழ வைக்கிறது
If People like Periyar Anna Kalaignar Kalki kannadasan had the knack of conveying any complex issue with very common and simple words
Vairamuthu probably is the best person who uses appropriate words that are technically, historically as well as culturally accurate
-oOo-
எந்த வாசல் வழி காதல் நடந்துவரும்
என்று காத்துக்கிடந்தேன்
அது வானில் பறந்து வந்து
கூரை திறந்து வரும்
என்று இன்று தெளிந்தேன்
தாவி வந்து என்னை அணைத்தபோது
எந்தன் சல்லிவேர்கள் அறுந்தேன்
சாவின் எல்லைவரை சென்று மீண்டு இன்று இரண்டு ஜென்மம் அடைந்தேன்
துடிக்கும் உதடு கொண்டு
துடைத்திடு வெட்கத்தை
அணைப்பின் ஆதிக்கத்தால்
வெளியேற்று அச்சத்தை
சுகமாய் சுகமாய் கொள்ளையிடு
என் உயிரை மட்டும் விட்டுவிடு
சட்டென நனைந்தது நெஞ்சம்
சட்டென நனைந்தது நெஞ்சம்
சர்க்கரையானது கண்ணீர்
இன்பம் இன்பம் ஒரு துன்பம்
துன்பம் எத்தனை பேரின்பம்
உடலுக்குள் மல்லிகைத் தூறல்
என் உயிருக்குள் மெல்லிய கீறல்
சுகமாய் சுகமாய் கொள்ளையிடு
என் உயிரை மட்டும் விட்டுவிடு
-oOo-
The word that caught my attention here is சல்லி வேர்
Tap root is ஆணி வேர், Fibrous root is சல்லி வேர்
Tap root mostly seen in dicot (dicotyledon) plants like pulses, legumes
Fibrous root seen in monocot (monocotyledon) plants like cereals eg Paddy Mostly monocot plants are the ones which are relocated in the process of agricultural cultivation – நாத்து நடுதல்
Until recently (till we had modern technology of transferring the trees using a conical excavator) It was not possible to uproot a dicot plant and plant it elsewhere
Mostly it will die because We will break the tap root
But Monocot can be planted else where. And it is the norm too
If he has written வேர் அறுந்தேன், That means permanent damage. The next line மீண்டு இன்று இரண்டு ஜென்மம் அடைந்தேன் becomes meaningless
But
The use of specific word for fibrous root சல்லி வேர் gives meaning to the next line மீண்டு இன்று இரண்டு ஜென்மம் அடைந்தேன்
-oOo
Quiz : ARR has used the same tune சட்டென நனைந்தது நெஞ்சம், சர்க்கரையானது கண்ணீர், இன்பம் இன்பம் ஒரு துன்பம், துன்பம் எத்தனை பேரின்பம் in another song. Can you recognise
1. If a new consultant shows up ,showers “abuses”(literal) in OT,just because out of 90 patients, 89 RTPCR were sent in 2 hours timeline and one was missed.( One of the many examples)
2. Always shows that the students are absolutely poor in everything.
Yes,she/he teaches .
Asked by people around to accept the tantrums and abuses ,because the teacher is good.
But,
How long will this culture and attitude continue ?
Isn’t it a high time to stop passing down the same tantrums , which you were part of in your residency (in the other top institute of country and a good name worldwide) ?
I don’t agree with this, that – We learn under stress/upon listening “kind” words.
Opinions/ Suggestions please.
My Answer
There can Three possibilities
1
The consultant behave the same with every one – staff, OT Technician etc
2
The consultant behaves like this only with students, but nice with other cadres
3
The consultant behave the nice with all others (including other students) but is nasty only with you
-oOo-
1
If the consultant behave the same with every one –> then it is his nature. It requires a long term correction. Being a resident, it is not your job. Just follow the EIEO Policy (ear in ear out – means, don’t take words beyond your auditory nerve into your cortex)
2
If the consultant behaves like this only with students, but nice with other cadres, then it is a result of the misconception that “Abusers are best teachers and abused students are best students” . . . Sadly, there are many doctors who support this even today . . . You can’t do much except taking a pledge that you won’t abuse your students when you become a teacher
3.
If the consultant behave the nice with all others (including other students) but is nasty only with you, the fault may be with you or with him/her
If the fault is with you, correct yourself
If the fault is with him/her, change the Unit
Let us start with debunking the common whatsapp forward that many people who were advised Cesarean in Private Had Normal Delivery in Government Hospitals
Around 10 Lakh Deliveries happen each year in Tamil Nadu
Of these
If No Cesarean is done, 50000 mothers will die
To save this 50000 mothers, just 50000 cesareans won’t be enough
This is a concept most non medicos and even many medicos don’t understand
—
This applies to almost all indications
Health care is a Non-Cartesian Science
We just cannot accurately predict the correct persons to do it
In Any Surgery
We need to “overdo” the numbers to make sure that we don’t miss those who need it
If we want to save more people –> There will always be some one who underwent the surgery, even though they would have been cured without surgery
If we want to make sure that only those who absolutely need surgery are operated –> There will be always some one who died because of non surgery
So
There will be always people who were recommended surgery
What is the cesarean was indicated for fetal reasons
The delivery would still be normal
But
Child would be abnormal
So Where does the question of ethics even rise here
Most of our patients are greedy and stupid
Not all
But Most
If I place a foot wide and twenty feet long wooden plank on the floor and ask people to walk from one end to another without feet touching the floor everyone will accept the challenge immediately and 90 percent will even complete it successfully in first attempt
If I place the same wooden plank between two buildings, say DMS annex and DPH building and ask to walk very few will volunteer
This is difference between taking a decision “surgery or not” in the nick of the moment
That is like walking from one building to another
If we analyse the case sheets leisurely (walking with plank on the floor) we can always says that certain percentage of surgeries are not needed
This applies to any emergency surgery, not just cesarean
It applies to CABG, It applies to debridement, it applies to thrombectomy, it applies to SDH evacuation (yeah I am a Neurosurgeon)
Assume there is a Road Traffic Accident Patient with Acute SDH and GCS 4/15
If operated his chance of survival is 1 %
That means
If I Operate on 100 people like this
99 will die
But
1 will live
–
Now
What will happen if I Operate these 100 patients in Private Hospital
They will pay a bill of Rs 5 lakhs
99 will still die and 1 will live
The relatives of the 99 patients will blame me – They will say that even though the doctor knew that it is 1 percent chance, he operated for sake of money
The stupid and greedy patients who lack ethics will blame me
But
Come to GH
If I do not operate, they will ask why I did not give a change
The stupid and greedy patients who lack ethics will blame me
So
For the same disease
The patients will blame the doctor for operating in GH
and
The patients will blame the doctor for not operating in Pvt
So
Who lacks ethics
It is patients
There is a big question mark on medical ethics
But
It is patients who lack ethics
Sorry to say
Even you lack ethics
Your post here shows you lack ethics
before questioning ethics
You could have at least known about fetal indications of cesarean
But you did not care
You mere started a blame game (in guise of questioning)
I know you will get angry on this comment
You will say that “I just questioned, I did not blame” or some vague excuses like “Can’t we even question” blah Blah
But
The fact is what you did is wrong
Taking decision sitting with coffee and vadai in AC room with just case sheets where the decision is not going to impact a life (is walking in a wooden plank placed in the floor)
Is different from
taking a decision at bedside where a life (in case of LSCS, two lives) is at stake
Along with fear of assualt, enquiry, hospital violence, court case etc (is walking in a wooden plank placed between two buildings)
Doctors will of course lean to the side of caution and there will be more surgeries done
This is to be expected and to be accepted
I would be surprised and intrigued only if the post-discharge-analysis of case sheets found out that all surgeries are needed. In that case there is something wrong . . That would be a case of the Dog which did not bark https://en.m.wikipedia.org/…/The_Adventure_of_Silver_Blaze
// If someone posts such data we should know what is the truth//
Exactly
Let me explain
1. This data is false
2. Even if there is a case of a woman who was asked to do cesarean, but she delivered normally –> The cesarean could have been because of fetal reasons
3. Even if there is a case of a woman who was asked to do cesarean for maternal reasons in one hosptial, but she delivered normally in others hospitals –> It was because the first hospital did not have facilities like Vaccuum or Forceps and the second hospital had
Just because
a surgery was advised first
But
It was not needed later
Does not mean the first decision is unethical
There are lots of factors sir
In RGGGH, we can take a patient to surgery in 30 minutes – The anaesthesiologist is on duty, the staff is on duty, the theatre technician is on duty, there are 4 tables in emergency OT
But
If I am working in say, Ambur GH, I won’t have this luxury
So
The number of surgeries I do in Ambur will be more than those of RGGGH because I will be more cautious in Ambur
முதலில் வரலாறில் உள்ளவை
அடுத்து என்ன நடந்திருக்கும் என்ற ஊகம்
இறுதியில் கல்கி என்ன சொல்லியுள்ளார்
என்று பார்போம்
–
(I) வரலாறு
இடைக்காலச்சோழர்களின் காலம் விஜயாலய சோழரில் இருந்து துவங்குகிறது. விஜயாலய சோழர் 848ல் இருந்து 870 வரை ஆள்கிறார். அவருக்கு பிறகு அவரது மகன் ஆதித்ய சோழர் (இவர் தான் ஆதித்ய சோழன் I) I 871 முதல் 907 வரை அரசாள்கிறார். ஆதித்திய சோழரின் மகன் பராந்தக சோழர். இவர் 907 முதல் 955 வரை 48 ஆண்டுகள் அரசராக உள்ளார்.
பராந்தக சோழருக்கு மூன்று மகன்கள்
ராஜாதித்ய சோழன்
கண்டராதித்ய சோழன்
அரிஞ்சய சோழன்
-oOo-
இதில் ராஜாதித்ய சோழர் தான் பட்டத்து இளவரசர். ஆனால் தக்கோலப்போரில் 1948லேயே இறந்துவிட்டார் (இன்று அரக்கோணம் அருகில் இருக்கும் சிறு ஊர் தக்கோலம்). போரில் யானை மேல் இருக்கும் போது கொல்லப்பட்டதால் இவருக்கு யானை மேல் துஞ்சிய தேவர் என்று பெயர்.
பராந்தக சோழரின் இரண்டாவது மகனான கண்டராதித்ய சோழரின் மனைவி செம்பியன் மாதேவி (இவர் மலவரையர் என்ற சிற்றரசரின் மகள்). இவர்களுக்கு மதுராந்தக உத்தம சோழன் என்று ஒரு மகன் உள்ளார். ஆனால் அவர் வயதில் இளையவர். அனேகமாக கண்டராதித்யரின் முதுமையில் பிறந்திருக்கவேண்டும்.
பராந்தக சோழரின் மூன்றாவது மகனான அரிஞ்சய சோழனின் மனைவி கல்யானி கர்நூலை சேர்ந்தவர். இவர்களின் மகன் பராந்தக சோழன் -II அல்லது சுந்தர சோழன் அல்லது பராந்தக சுந்தர சோழன்.
சுந்தர சோழனின் மனைவி திருக்கோவிலூர் மலைமானின் மகள்.
கண்டராதித்ய சோழர் இறைபணியில் விருப்பமாக உள்ளார்.
எனவே பராந்தகரின் ஆட்சிக்காலத்தில் காலத்தில் அவர் பட்டத்து அரசராக இருக்கும் போதே (950-955) பெரும்பாலான அரசு பணிகளை .அரிஞ்சய சோழன் செய்கிறார். 955ல் பராந்தகர் இறந்த பிறகு அரசராகிறார். ஒரே வருடத்தில் இறந்து விடுகிறார்.
956ல் கண்டராதித்ய இறந்தபோது உத்தமசோழனுக்கு வயது மிகக்குறைவு என்பதால் அவரை அடுத்து 956ல் அரிஞ்சய சோழன் அரசராகிறார்.
அவரும் ஒரு வருடத்தில் இறந்து விடவே, அப்பொழுதும் கூட உத்தம சோழனின் வயது குறைவு என்பதாஅரிஞ்சய சோழரை தொடர்ந்து அவரது மகன் சுந்தர சோழன் 957ல் அரசராகிறார். சுந்தர சோழருக்கு மூன்று குழந்தைகள்
1. ஆதித்ய கரிகாலன் அல்லது ஆதித்யன் II
2. குந்தவை
3. அருண்மொழி – பின்னர் ராஜ ராஜ சோழன்
சுந்தர 12 வருடங்கள் அரசாள்கிறார். அந்நேரம் 969ல் அவருக்கு பக்கவாதம் ஏற்படுகிறது
இந்நிலையில் அடுத்த அரசன் யார் என்று கேள்வி எழுகிறது
அரிஞ்சய சோழனும், சுந்தர சோழனும் அரசராகும் போது மதுராந்தக உத்தம சோழனுக்கு வயது குறைவு
எனவே அவர் அரசனாக முடியவில்லை
ஆனால்
சுந்தரசோழனுக்கு பக்கவாதம் வரும் போது மதுராந்தக உத்தமசோழன் வளர்ந்து பெரியவனாகிவிட்டார்
எனவே அவருக்கு இப்பொழுது ஆசை அதிகம்
இது மட்டும் பிரச்சனை அல்ல
செம்பியன் மாதேவியின் தந்தைக்கு அவரது பேரனை சோழ அரசராக்கவேண்டும் என்று ஆவல்
செம்பியன் மாதேவியின் சகோதரருக்கு அவரது மருமகனை சோழ அரசராக்கவேண்டும் என்று ஆவல்
திருக்கோவிலூர் மலைமானுக்கு அவரது பேரனை சோழ அரசராக்கவேண்டும் என்று ஆவல்
அவரது மகன், தற்பொழுதைய சிற்றரசருக்கு அவரது மருமகனை சோழ அரசராக்கவேண்டும் என்று ஆவல்
எனவே சுந்தர சோழருக்கு பக்கவாதம் ஏற்பட்ட போது நடந்த வாரிசு பிரச்சனை என்பது வெறும் அரண்மனை யுத்தம் மட்டுமல்ல அது சோழ பேரசரின் சிற்றரசுகளுக்கு இடைய நடந்த ஈகோ யுத்தம்
(650 ஆண்டுகள் கழித்து டெல்லியிலும் ஆக்ராவிலும் இதே தான் ஜாஹாங்கீர், குஸ்ரூ விஷயத்திலும் நடந்தது. இருவரின் மாமாவும், தாத்தாவவும் சேர்ந்து தூபம் போட்டு, தந்தையையும் மகனையும் மோதவிட்டார்கள் அந்த காலத்தில் அரசர்கள் படை திரட்டி வருகிறார்கள் என்று படித்திருப்போம். எப்படி திரட்ட முடியும், ஏது பணம் என்று பார்த்தால், இந்த தாத்தா, தாய்மாமன், மாமனார இருக்கும் பிற சிற்றரசர்களின் வேலை தான் அது. இது குறித்து இந்த நூலில் வாசிக்கலாம் )
இந்த நிலையில்
ஆதித்ய கரிகாலன் கொலை செய்யப்படுகிறார். யார் கொன்றார்கள் என்று தெளிவான சரித்திரம் இல்லை
ஆதித்ய கரிகாலன் கொல்லப்படும் போது ராஜ ராஜ சோழன் இலங்கையில் உள்ளார்
அவரை அழைத்து வந்து அரசனாக்க வேண்டும் என்று அவரது தாத்தா, தாய்மாமன், மாமனார் சிற்றரசர்கள் + அவரது அக்கா குந்தவை முயல்கிறார்கள்
அதை தடுக்க மதுராந்தக உத்தம சோழனின் தாத்தா, தாய்மாமன், மாமனார் சிற்றரசர்கள் முயல்கிறார்கள்
ஆதித்ய கரிகாலனின் மரணத்தால் எழுந்த அனுதாப அலையால் மக்கள் ஆதரவு ராஜராஜ சோழனுக்கு பெரிதாக உள்ளது
ஆனால் அவர் அரசராக வில்லை. சிம்மாசனத்தை தனது சித்தப்பாவிற்கு தியாகம் செய்கிறார்
எனவே மதுராந்தக உத்தம சோழன் 970ல் சோழ அரசராகிறார்
இந்த நேரத்தில் ராஜ ராஜன் தோழர் படை தளபதியாகிறார்
சோழ ராஜ்யத்தை விரிவுபடுத்துகிறார்
985ல் மதுராந்தக உத்தமசோழன் மரணமடைகிறார். அவருக்கு மதுராந்தக கண்டராதித்யா என்று ஒரு மகன் இருந்தாலும்,
அதன் பிறகு சோழ சிம்மாசனம் ராஜ ராஜ சோழனின் வாரிசுகளுக்குத்தான் வருகிறது
985-1014 30 வருடங்கள் ராஜராஜசோழன்
1014-1044 30 வருடங்கள் ராஜேந்திர சோழன்
1044-1054 ராஜாதிராஜ சோழன்
1054-1059 இரண்டாம் ராஜேந்திர சோழன்
-oOo-
(II) என்ன நடந்திருக்கும் என்ற ஊகம்
ஆதித்ய சோழன் பெரிய போர் வீரன்.
அதனால் அந்த திமிர் இருந்திருக்கவேண்டும்
மதுராந்தக உத்தம சோழன் அரண்மனைக்குள்ளேயே வளர்ந்தவன்
அதனால் சிற்றரசர்களை மிகவும் மரியாதையாக நடத்தியிருப்பார்
எனவே பெரும்பாண்மையான சிற்றரசர்கள் மதுராந்தகன் தான் “நமக்கு ஏற்ற பீசு” என்று முடிவு செய்து மதுராந்தக உத்தம சோழனை ஆதரித்திருப்பார்கள்
அது தவிர
அவர்தான் பராந்தக இரண்டாது மகனின் மகன்
ஆதித்ய கரிகாலன் மூன்றாவது மகனின் பேரன் தான்
எனவே இந்த சிற்றரசர்கள் எல்லாம் சேர்ந்து போட்டு தள்ளிவிட்டார்கள்
ஆனால்
அதன் பிறகு மக்கள் அனுதாபம் ராஜராஜசோழன் பக்கம் திரும்பியது அவர்கள் எதிர்பாராது
ஆனால்
ராஜராஜன் புத்திசாலி
மக்கள் அனுதாபம் மட்டும் இருந்தால் போதாது
சிற்றரசர்களின் ஆதரவு வேண்டும் என்று புரிந்து கொண்டிருக்கவேண்டும்
அன்று அவர் சிம்மாசனம் ஏறியிருந்தால்
மதுராந்தக உத்தம சோழனால் தொல்லை/li>
சிற்றரசர்களினால் தொல்லை
மேற்றே சேரன், வடக்கே சாளுக்கியன், தெற்கே பாண்டியனால் தொல்லை
இவர் போருக்கு சென்றால் இங்கே அரண்மனை காலி
எனவே
மிகவும் திறமையாக உத்தம சோழனை அரசராக்கி விட்டு அவர் படைதளபதியாகிவிட்டார். (யுவராஜவாக கூட ஆகவில்லை). 970ல் அவருக்கு 23 வயது
தளபதி ஆகி போர் எடுத்து சென்று எல்லைகளை விரிவாக்கி எல்லையில் பிரச்சனை இல்லை என்ற நிலைக்கு கொண்டுவருகிறார்
சிற்றரசர்களின் ஆதரவை பெருகிறார்
அதன் பிறகு 985ல் மதுராந்தக உத்தமசோழன் இறந்த பிறகு
38ஆம் வயதில் சோழப்பேரரசராக முடி சூட்டிக்கொண்டு 29 ஆண்டுகள் அரசாள்கிறார்
67ஆம் வயதில் இறந்து விடுகிறார்
-oOo-
(III) கல்கி என்ன சொல்லியுள்ளார்
சுந்தர சோழருக்கு பக்கவாதம் ஏற்படுவதில் இருந்து
ராஜராஜன் சிம்மாசனத்தை தியாகம் செய்வது வரை
நடக்கும் நிகழ்ச்சிகளை கற்பனை கலந்து 6 பாகமாக (5 பாகம் தான். ஒன்று பெரிது) எழுதியது கல்கியின் சாதனை
மேலே கூறியவர்கள் தவிர
கல்கியின் கதையில் மேலும் சில கற்பனை கதாபாத்திரங்கள் வருகின்றன
நந்தினி
சேந்தன் அமுதன்
பூங்குழலி
வாணி அம்மாள்
மந்தாகினி
முருகையன்
ஆழ்வார்கடியன் நம்பி
வாணி அம்மாள் மந்தாகினியின் சகோதரி. இந்த இரு சகோதரிகளின் சகோதர் குழந்தைகள் தான் பூங்குழலி மற்றும் முருகையன்
வாணி அம்மாவின் வளர்ப்பு மகன் – சேந்தன் அமுதன் (கதைப்படி செம்பியன் மாதேவியின் புதல்வன் – பிற்காலத்தில் உத்தம சோழன்)
மந்தாகினியின் குழந்தைகள் – நந்தினி மற்றும் ஆரம்பத்தில் வரும் உத்தம சோழன் (கதைப்படி இவர் தான் ஆதித்ய கரிகாலனை கொல்பவர். ஆதித்ய கரிகாலனை கொன்ற உத்தம சோழனை ராஜராஜன் அரசனாக்கினால் அது தியாகம் இல்லையே. . . அது கோழைத்தனம் அல்லவா . .எனவே உத்தமச்சோழன் பாத்திரத்தை இரண்டாக பிரித்து
ஒன்று மந்தாகினின் குழந்தை – அவன் வில்லன்,
ஒன்று செம்பியன் மாதேவியில் மகன் – அவன் நல்லவன் என்று கல்கி ஆக்கிவிட்டார்
வாணி அம்மாள் – மந்தாகினியின் சகோதர் குழந்தைகள் தான்
பூங்குழலி மற்றும் ராக்கையன்